Monday, March 24, 2008

மழையிரவும் சில வரியும்

இந்த மழையிரவில்
என்னோடு விழிக்கிறது கவிதை
வெற்றுத் தாள் நிரப்ப பிரயத்தனிக்க
மண்டைக்குள் வீடு விழிக்கிறது.
படியிறங்கிப் போகும் வரிகளை
இழந்த காதலின் கண்களால்
கையாலாகாது கவனிக்கிறேன்.
அவ்வப்போது
மின்னல் கண்திறந்து
வீதிவிழுங்கி
கனத்த துளிகளால்
நிலத்தில் ஓவென்றறைகிறாய் மழையே!
ஒத்துக்கொள்கிறேனடி
உன்னைவிடக் கவிதையில்லை!

Labels:

1 Comments:

At March 24, 2008 at 11:28 PM , Blogger Nanda Nachimuthu said...

ஒத்துக்கொள்கிறேனடி
உன்னைவிடக் கவிதையில்லை!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

[Valid Atom 1.0]